முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் மேலும் 10 ஆயிரம் சி.ஏ.பி.எப் படை வீரர்கள் குவிப்பு

சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

ஜம்மு : மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதலாக 10 ஆயிரம் மத்திய ஆயுதப்படை பிரிவு போலீஸ் வீரர்களை காஷ்மீரில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தப் பயங்கரவாத தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்தியதாக ஒப்புக்கொண்டது. இந்தத் தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மேலும் வீரர்கள்...

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது கூடுதலாக 10 ஆயிரம் சி.ஏ.பி.எப் வீரர்களை காஷ்மீரில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஜம்மு- காஷ்மீர் அரசிற்கு ஒரு ஆணையை அனுப்பியுள்ளது. அதில் 45 கம்பெனி சிஆர்பிஎப் படை வீரர்கள், 10 கம்பெனி இந்தியா-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், 10 கம்பெனி சஷஸ்த்திர சீமா பல், 35 கம்பெனி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஆகிய படைகளின் வீரர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூடுதல் படை குவிப்பிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஏற்கெனவே ஜம்மு- காஷ்மீர் பகுதிகயில் பாதுகாப்பிற்காக 65 ஆயிரம் சி.ஏ.பி.எப் வீரர்கள் பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து