முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் ஜெட்லி தலைமையில் 33-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் - 70 பொருட்களுக்கு வரி குறைப்பு செய்ய ஜெயகுமார் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 70 பொருட்களுக்கு வரி குறைப்பு செய்ய அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தினார்.

டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் 33-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். ரியல் எஸ்டேட் வரி, லாட்டரி சீட்டு உள்ளிட்டவை பற்றி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. நிலுவையில் உள்ள தமிழக ஜி.எஸ்.டி தொகை ரூ. 4,459 கோடியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும். சில பொருட்களின் வரிகுறைப்பு, வரிவிலக்கு தொடர்பான கோரிக்கை மீது நடவடிக்கை தேவை. 70 பொருட்கள் மற்றும் 9 சேவைகளுக்கு வரிகுறைப்பு செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து