முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 தவணைகளில் 4 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்: 22 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம் - சென்னையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : 22 லட்சம் சிறு குறு விவசாயிகளுக்கு 6000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதிய திட்டத்தை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 6000 வழங்கும் பிரதமர் திட்டத்தின் முதல் தவணை தொகை வழங்கும் விழா, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி அங்கிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். பல்வேறு மாநில விவசாயிகளுக்கு முதல் தவணை தொகை வழங்கி கலந்துரையாடினார். தமிழக சிறுகுறு விவசாயிகளுக்கு முதல் தவணை உதவித்தொகை வழங்கும் திட்டத் துவக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசினார்.  அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி இந்தியா முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகள் மகிழ்ச்சியடைகின்ற விதமாக பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தை துவக்கி விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமான திட்டத்தை அளித்திருக்கின்றார் என்று சொன்னால் விவசாயிகளின் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பது நன்றாக தெரிகின்றது. அதற்காக பிரதமருக்கு சிறு, குறு விவசாயிகளின் சார்பாக, தமிழக மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அனைவருக்கும் உணவளிக்கும் உன்னத பணியை செய்து வரும் வேளாண் பெருமக்கள், இந்திய நாட்டின் முதுகெலும்பாக விளங்கி வருகிறார்கள். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் வழங்கி வருகின்றன. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி என்ற ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில், விவசாயிகள் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு தேவையான இடுபொருட்களை வாங்கி பயிர் செய்திடவும், அதன் மூலம் அதிக மகசூல் பெற்று தங்கள் பண்ணை வருவாயை பெருக்கிடவும் தேவையான நிதியுதவியை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின்படி ரூபாய் 2,000 வீதம் 3 தவணைகளாக ஆண்டுக்கு வேளாண் பெருமக்களுக்கு மொத்தம் 6,000 ரூபாய் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்தியா முழுவதும் உள்ள 2 ஹெக்டேர் அல்லது 5 ஏக்கர் வரையிலான விளை நிலங்களை உடைய சிறு, குறு விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வீதம் இந்த திட்டத்தின் வாயிலாக நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்தொகை மூன்று தவணைகளில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 2018-19 ஆண்டிற்கு 1.12.2018 முதல் 31.3.2019 வரையிலான முதல் தவணைத் தொகை வழங்கி இத்திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திட்டத்தின் மூலம், தமிழகத்தில் உள்ள சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் விபரங்கள் மத்திய அரசின் வலைதளத்தில் தமிழக அரசின் வேளாண்மைத் துறையினால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், முறையான சரிபார்த்தலுக்குப் பின் இன்றைக்கு சிறு, குறு விவசாய குடும்பங்களுக்கு மத்திய அரசால் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டு, முதல் தவணையின் முதல் கட்டமாக இன்றே (நேற்று) தலா 2,000 ரூபாய் வழங்கப்பட்டிருக்கின்றது. இன்று(நேற்று) வரை, சுமார் ரூபாய் 277 கோடி இதற்காக ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இ்நத நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பியூஸ்கோயல், அமைச்சர் துரைக்கண்ணு, பா.ஜ.க மாநில செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் பேடி, வரவேற்றுப் பேசினார். வேளாண் இயக்குனர் தட்சிணா மூர்த்தி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து