முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும், மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள பாவேந்தர் பாரதிதாசன் சிலை அருகில்  மகிழம் மரக்கன்றினை நட்டு, திட்டத்தினை துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, தமிழகத்தின் பசுமைப் போர்வையை மேம்படுத்தும் உன்னத நோக்கிலும், வனப்பகுதியில் மட்டுமின்றி வனத்திற்கு வெளியே இருக்கும் காலியிடங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அம்மாவின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும், கடந்த 2012-ம் ஆண்டு 64 லட்சம் மரக்கன்றுகளும், 2013-ம் ஆண்டு 65 லட்சம் மரக்கன்றுகளும், 2014-ம் ஆண்டு 66 லட்சம் மரக்கன்றுகளும்,  2015-ம் ஆண்டு 67 லட்சம் மரக்கன்றுகளும், 2016-ம் ஆண்டு 68 லட்சம் மரக்கன்றுகளும், 2017-ம் ஆண்டு 69 லட்சம் மரக்கன்றுகளும், 2018-ம் ஆண்டு 70 லட்சம் மரக்கன்றுகளும் நடப்பட்டு இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், இந்த ஆண்டும் அம்மாவின் 71-வது பிறந்த நாளையொட்டி மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் 191 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.

இந்த மரக்கன்றுகளை நடும் பணியானது பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். மேலும் இம்மரக்கன்றுகள் வனப்பகுதிகளிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும், பெரிய அளவிலான குடியிருப்புகளிலும் நடப்பட்டு பராமரித்து பாதுகாக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு பருவநிலை மற்றும் மண்வளத்திற்கு ஏற்ற மரக்கன்றுகளான ஆல், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு போன்ற பல்வேறு மரக்கன்றுகள் நடப்படும். இந்த மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகியவை இணைத்து செயல்படுத்தும்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திண்டுக்கல் சி. சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து