முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் ஐகோர்ட்டு நீதிபதியை கொல்ல முயற்சி

சனிக்கிழமை, 2 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துங்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் ஐகோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் அயுப்கான். இவர் வீட்டில் இருந்து கோர்ட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். ஹயாதாபாத் என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் சிலர் நீதிபதியின் கார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பி சென்றனர். இதில், நீதிபதி அயுப்கான் மற்றும் கார் டிரைவரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. அவர்கள் காருக்குள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நீதிபதியை கொலை செய்ய முயன்ற நபர்கள் யார்? அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து