முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிரியாவில் 33 ராணுவ வீரர்கள் பலி

திங்கட்கிழமை, 4 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

பெய்ரூட் : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிரியாவில் 33 ராணுவ வீரர்கள் பலியானதாக அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் வசம் இருந்த பகுதிகள் அரசு படையினரால் மீட்கப்பட்டு வருகிறது. இட்லிப் பகுதியில் ஹமா மற்றும் அலெப்போவின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் ஹயாத் தாகிர் அல்- ஷாம் என்ற பயங்கரவாத அமைப்பின் பிடியில் உள்ளன. ஹயாத் தாகிர் அல்-ஷாம் அமைப்பு அல் கொய்தாவின் கிளை இயக்கமாக முன்பு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இட்லிப்பில் ஹமா, அலெக்போவை மீட்க சிரியா ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஹயாத் தாகிர் அமைப்பினர் தாக்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்ததில் 33 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த தகவலை சிரியா ராணுவம் உறுதி செய்துள்ளது. ஆனால் எத்தனை பேர் பலியாகினர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 27 ராணுவ வீரர்கள் பலியாகினர் என சிரியாவில் இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து