முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் - சென்னையில் இருந்து கொல்லத்துக்கு புதிய விரைவு ரெயில் சேவை துவக்கம்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் இருந்து மதுரை வழியாக கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லத்துக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் சபரிமலைக்கு செல்லும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

தருமபுரி  ரயில் நிலையத்தில் நேற்று பிற்பகல் நடந்த விழாவில் காணொலி காட்சி மூலம் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் இந்த விரைவு ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதே போன்று தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை தினமும் இயக்கப்பட்டு வருகிற அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.16191), நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து