முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்தை ஒழிக்க பாடுபடும் என்னை பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன - கர்நாடக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசம்

புதன்கிழமை, 6 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : எதிர்க்கட்சிகள் என்னை நீக்குவதற்கு முயற்சிக்கிறார்கள்; நானோ தீவிரவாதம், வறுமை மற்றும் ஊழலை சுத்தமாக துடைத்தெறிய முயற்சிக்கிறேன் என்று கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

கர்நாடக மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்து அங்குள்ள கல்புர்கி நகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கலப்பட கூட்டணி

125 பேரின் ஆசிர்வாதத்தைப் பெற்ற ஒரு நபர் மற்றவர்களை பார்த்து பயப்பட தேவையில்லை. கடந்த பிப்ரவரி மாதம்  26-ல் பாகிஸ்தானில் தீவிரவாத முகாமை இந்திய விமானப் படை தகர்த்துள்ளதன் மூலம் உலகமே ஒரு புதுவகை வீரத்தைப் பார்த்துள்ளது. இது மோடியுடையது மட்டும் அல்ல, 125 கோடி மக்களின் தைரியம். எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி ஒரு கலப்பட கூட்டணி. மக்கள் விரும்புவது உறுதியான ஒரு அரசாங்கத்தைத்தான் தான்.

ஒத்துழைப்பு தருவதில்லை

கர்நாடகா முதல்வர் எச்.டி.குமாரசாமியோ ரிமோட் கண்ட்ரோல்டு சி.எம். ஆக இருக்கிறார். முதுகில் குத்துபவர்களால் இங்கு உருவாகி இருப்பதுதான் காங்கிரஸ் ஜனதா தளக் கூட்டணி ஆட்சி. இங்குள்ள மாநில அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி ' திட்டத்தை அமல்படுத்த அவர்கள் ஒத்துழைப்பு தருவதில்லை. மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஒரு சுவரை மாநில அரசு எழுப்புமேயானால் விவசாயிகள் அதை நிச்சயம் இடித்துத் தள்ளி விடுவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து