முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான 3-வது ஒருநாள்: சொந்த மைதானத்தில் டோனி சாதிப்பாரா?

வியாழக்கிழமை, 7 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் சொந்த மைதானத்தில் எம்எஸ் டோனி சாதிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

சொந்த ஊரில்...

எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத அளவுக்கு டோனிக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவரது அனைத்து செயல்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெறும் 3-வது ஆட்டம் டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடக்கிறது. சொந்த மைதானத்தில் அவர் சாதிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

சாதனை படைக்கும்...

சர்வதேச போட்டியில் 17 ஆயிரம் ரன்களை எடுத்து சாதனை படைக்கும் ஆர்வத்தில் டோனி உள்ளார். அதற்கு இன்னும் 33 ரன் தேவை. அவர் டெஸ்டில் 4876 ரன்னும், ஒருநாள் போட்டியில் 10,474 ரன்னும், 20 ஓவரில் 1617 ரன்னும் என ஆக மொத்தம் 16,967 ரன் எடுத்துள்ளார். ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 59 ரன் எடுத்த டோனி நாக்பூர் போட்டியில் ரன் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். ராஞ்சியில் அவர் 33 ரன் எடுத்து 17 ஆயிரம் ரன்னை தொடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5-வது இந்தியர்...

சர்வதேச போட்டியில் 17 ஆயிரம் ரன்னை தொடும் 5-வது இந்தியர் என்ற பெருமையை டோனி பெறுவார். தெண்டுல்கர், டிராவிட், விராட் கோலி, கங்குலி, சேவாக் ஆகியோருக்கு அடுத்த நிலையை பெறுவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து