முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் அருகே முன்விரோதத்தில் கணவன் _ மனைவி வெட்டி படுகொலை

திங்கட்கிழமை, 11 மார்ச் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -திண்டுக்கல் அருகே முன்விரோதத்தில் கணவன், மனைவியை வெட்டி படுகொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் பாறைப்பட்டியைச் சேர்ந்த பாண்டி என்ற திரு ப்பூர் பாண்டி45). இவரது மனைவி பஞ்சவர்ணம்(40). இவர்களுக்கு அசோக், சேகர் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாறைப்பட்டியில் குமரேசன் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தகொலை வழக்கில் அசோக் மற்றும் சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது இவர்கள் 2 பேரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். குமரேசன் தரப்பினரால் தங்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்பதை உணர்ந்து திரு ப்பூர் பாண்டி தனது குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நல்லாம்பட்டியில் நடந்த தனது உறவினர் வீட்டு விஷேசத்தில் கலந்து கொள்வதற்காக திரு ப்பூர் பாண்டி குடும்பத்துடன் வந்திருந்தார். நெசவாளர் காலனியில் உள்ள தங்கராஜ் வீட்டில் தங்கியிருந்தனர். நேற்று காலை வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றிருந்தனர். திரு ப்பூர் பாண்டி மற்றும் பஞ்சவர்ணம் மட்டுமே இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த கும்பல் அந்த வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பாண்டி மற்றும் பஞ்சவர்ணம் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அவர்களை வழிமறித்த அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இதில் அடுத்தடுத்து பஞ்சவர்ணமும், பாண்டியும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் தலைமையில் தாலுகா போலீசார் விரைந்தனர். அவர்கள் இரட்டைக் கொலை குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து