முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தையை மறந்து விட்டு சென்றதால் அழுத தாய் - விமானத்தை திருப்பிய விமானிக்கு பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

சவுதி : விமான நிலையத்தில் பெண் ஒருவர் குழந்தையை மறந்து விட்டதால், விமானத்தை விமானி திருப்பிய விநோதமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

சவுதி அரேபியாவின் ஜெட்டாக்கில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சவுதி அரேபியா ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட பின்னர் பெண் ஒருவர் அழுதுள்ளார். அப்போது என்னுடைய குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டு விட்டேன் எனக் கூறி அழுதுள்ளார். உடனடியாக விமானி, விமானத்தை விமான நிலையத்திற்கு திருப்ப கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதியை கோரியுள்ளார். அனுமதி அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விமானி பேசும் வீடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்த போது விமானம் வானில் பறக்க தொடங்கி விட்டதா? அல்லது ரன்வேயில் செல்லும் போது நடந்ததா? என்பது குறித்த தகவல் ஏதுமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து