முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது முறையாக தோல்வி அடைந்த பிரெக்சிட் தீர்மானம்

புதன்கிழமை, 13 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் இங்கிலாந்து அரசின் முடிவுக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பிரெக்சிட் என்றழைக்கப்படும் இந்த திட்டத்திற்கான நடவடிக்கையை பிரிட்டன் நாடாளுமன்றம் 2-வது முறையாக நிராகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்த நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக தோல்வியடைந்தது.

தெரசா மே-யின் தீர்மானத்திற்கு ஆதரவாக 202 பேரும் எதிராக 432 பேரும் ஓட்டளித்தனர். இதனால் 149 வாக்குகள் வித்தியாசத்தில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. பிரெக்சிட் நடவடிக்கையின் காலக்கெடு இம்மாதம் 29-ம் தேதி முடிவடைய உள்ளது. பிரெக்சிட் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ள இங்கிலாந்து எம்.பி.க்கள் ஐரோப்பிய யூனியனுடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தெரசா மே அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து