முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசூதி துப்பாக்கி சூடு நாட்டின் கறுப்பு நாள்: நியூசிலாந்து பிரதமர் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

கிறிஸ்ட்சர்ச், மசூதி துப்பாக்கி சூட்டில் 30 பேர் பலியாகி உள்ளனர் இது நாட்டின் கறுப்பு நாள் என்று நியூசிலாந்து பிரதமர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நியூசிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர் மசூதியில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் போலீசார் மசூதியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் தற்போது பலியானவ்ர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து உள்ளது. 2-வது துப்பாக்கி சூடு லின்வுட் புறநகர் பகுதி மசூதியில் நடந்தது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

துப்பாக்கி சூடு தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன் கூறியதாவது:-

நியூசிலாந்தில் இதற்கு முன் இதுபோன்ற மோசமான வன்முறைச் செயல்கள் நடந்ததில்லை. அதற்கு இடமும் இல்லாமல் இருந்தது. அப்படி இருக்கையில் வன்முறைச் செயலை நியூசிலாந்தின் கறுப்பு நாள் என்று சொல்வேன். மக்கள் சுதந்திரமாக தங்கள் வழிபாட்டை நடத்தி வந்த இடத்தில், பாதுகாப்பாக இருந்த இடத்தில் இந்த மோசமான துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இந்த செயலைச் செய்தவர்கள் திட்டமிட்டு இதை நிகழ்த்தியுள்ளார்கள். இதுபோன்ற செயலுக்கு நியூசிலாந்து சமூகத்தில் இடமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து