முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் 20 பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசவுள்ளதாக தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் 20 பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் கட்டமாக 8 தொகுதிகளில் அடுத்த மாதம் ஏப்ரல் 11-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். இதுபற்றி பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் கூறும் போது,

பிரதமர் மோடி தன் முதல் பிரச்சார கூட்டத்தை எந்த இடத்தில், எப்போது தொடங்குவார் என்பது முடிவாகவில்லை, ஆனால் பெரும்பாலும் சகரான்பூரில் உள்ள ஷங்கம்பூரி தேவி கோவிலில் தரிசனம் செய்த பிறகு தான் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார். தற்காலிக திட்டப்படி உத்தர பிரதேச மாநிலத்தில் 20 பிரச்சார கூட்டங்களில் பிரதமர் பேசுவார் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து