முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் அறிக்கை வெளியிட கட்சியினருக்கு கட்டுப்பாடு விதித்து தேர்தல் ஆணையம்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : வாக்குப்பதிவு நடக்கும் 48 மணி நேரத்திற்கு முன்பாக எந்த கட்சியும், தேர்தல் அறிக்கையை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்றத்துக்கு  ஏப்ரல் மாதம் 11-ம் தேதி  துவங்கி மே மாதம் 19-ம் தேதி  வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் மே 23-ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில்,

ஓட்டுப்பதிவு நடக்கும் 48 நேரத்திற்கு முன் எந்த அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கைகளை வெளியிடக் கூடாது. கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள், மூத்த நிர்வாகிகள், மீடியாக்களை சந்திக்கக் கூடாது. தேர்தல் குறித்து பேட்டி கொடுக்கக் கூடாது. இந்த காலகட்டத்தில், எந்த நிர்வாகியும், தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஓட்டு கேட்கக் கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து