முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் 150 இடங்களில் வெற்றி பெறும் - சந்திரபாபு நாயுடு உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

திருமலை : ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் 150 இடங்களில் வெற்றி பெறும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.   

திருப்பதியில் உள்ள தாரகராமா விளையாட்டு மைதானத்தில் தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:

எப்போது தேர்தல் வந்தாலும் நான் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பின், தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவது வழக்கம். அதன்படி நான் திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தேன். இந்தத் தேர்தலில் மக்கள் ஆதரவோடு நான் வெற்றி பெறுவேன். தேர்தல் தொடர்பாக நான் தினமும் நமது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு வாரிய தலைவர் பதவி, கமிட்டி தலைவர் பதவிகளில் இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். இதுபோல கட்சியின் கடைக்கோடி உறுப்பினர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் 18 கோரிக்கைகளை முன் வைத்தேன். அதில் அவர் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. போராட்டம் செய்தாலும், மத்திய அரசு தெலுங்கு தேசம் கட்சி மீது அடக்குமுறைகளை கையாள்கிறது. பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தாலும் தெலுங்கு தேசம் கட்சி அரசு பயப்படாது. தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது, ஐதராபாத் நகரத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டேன். தற்போது அங்கு முதல்-மந்திரியாக இருக்கும் சந்திரசேகரராவ், என்னை விமர்சனம் செய்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சியை எதிர்த்தால், அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து