முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம்: அமெரிக்காவில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 18 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

ஹுஸ்டன் :  பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பங்கேற்றனர்.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட பல நாடுகள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா.வில் முறையிட்டன. ஆனால் வழக்கம்போல் சீனா அதை தடுத்துவிட்டது. இதற்கிடையில் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து ஹுஸ்டன் நகரில் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பங்கேற்றனர். ‘‘தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் மாறி வருகிறது. அல் காய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தார். லண்டன் குண்டுவெடிப்பு, கலிபோர்னியாவில் நடந்த தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது. உலகின் எந்த மூலையில் தாக்குதல் நடந்தாலும் அதில் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்கள் பின்னணியில் உள்ளன. தீவிரவாதத்தை தடுக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து