எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மாணவர்கள் பெற்ற கல்விக்கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஏழைகள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் அ.தி.மு.க. பாராளுமன்றத்திற்கான தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கங்கை - கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
56 பக்க அறிக்கை
பாராளுமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் நேற்று காலை வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையை வெளியிட அதனை அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார். 56 பக்கங்கள் கொண்ட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. வண்ண வடிவமைப்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவப்படங்களும் இடம்பெற்றுள்ளது. 38 அத்தியாயங்களை கொண்ட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கினார். அதன் விபரம் வருமாறு:-
நாடு முழுவதும்...
நாடு முழுவதும் வாழுகின்ற வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கும், தங்கள் அடிப்படை வசதிகளை நிறைவு செய்திடத் தேவையான வருமானம் இன்றி அல்லலுறும் மக்களுக்கும் மாதந்தோறும் எவ்வித நிபந்தனையும் இன்றி ரூபாய் 1,500 வழங்கும் அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டம், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோர், கைவிடப்பட்ட பெண்கள், வருமானமற்ற விதவைப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், நிலமற்ற விவசாய கூலித்தொழிலாளர்கள், கிராமப் புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழும் உடலுழைப்பு தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர் ஆகியோருக்கு மாதம் தோறும் ரூபாய் 1,500 உதவித் தொகையை நேரடியாக அவர்தம் வங்கிக் கணக்கில் செலுத்தும் வறுமை ஒழிப்புத் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த அ.தி.மு.க. அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.
பிலிப்பைன்ஸ் பாணியில்...
எம்.ஜி.ஆர். தேசிய வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் டெஸ்டா நிறுவனம், அந்த நாட்டின் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் உலகெங்கும் வேலைவாய்ப்பு கிடைத்திடும் வண்ணம் வழங்கி வரும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை மாதிரியாகக் கொண்டு நம் நாட்டிலும் புதிய அமைப்பு ஒன்றினை உருவாக்கி இந்தியஇளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் திறன் மேம்பாடு அளிக்கவும், அத்தகைய பயிற்சிகளைப் பெற்றோர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு பெறுவதை எளிதாக்கிடவும் புதிய அமைப்பு ஒன்று தேசிய அளவில் உருவாக்கப்பட அ.தி.மு.க. மத்திய அரசை வலியுறுத்தும்.
காவிரி - கோதாவரி இணைப்பு
காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த, மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும். வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைகளுக்காகவும் தண்ணீர் கொண்டு செல்லும் நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்படும். பெருமழை வெள்ளக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல பின்வரும் புதிய திட்டங்களை செயல்படுத்திட மத்திய அரசை வலியுறுத்தி, நிதி ஆதாரத்தைப் பெற்று, விரைந்து செயல்படுத்த அ.தி.மு.க. நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
கல்விக்கடன் ரத்து செய்ய நடவடிக்கை
நொய்யல் ஆற்றையும், மேற்கு தொடர்ச்சி மலையையும் மையமாக கொண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் பருவ மழைக் காலங்களில் பெறப்படும் மழை, வெள்ள நீரை கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியப் பகுதி மற்றும் மதுக்கரை வனச்சரகம் வெள்ளப்பதி பிரிவு நண்டக்கரை, முண்டன் துறை,கோவை புதூர், போளுவாம்பட்டி வனச் சரகம், நரசீபுரம், தாளியூர் மற்றும் இவற்றைச் சுற்றியுள்ள இடங்களில் தடுப்பணைகளை அமைத்தும், குளம் குட்டைகளில் மழை நீரை நிரப்பியும், நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம், காவேரி ஆற்றில் அமைக்கப்பட்டிருக்கும் மோகனூர் தடுப்பணையில் இருந்து நாமக்கல் மாவட்டத்தின், மோகனூர், நாமக்கல், புதுச்சத்திரம், எருமைப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்று நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் பயன் பெறும் வகையில், காவேரி (கட்டளை கதவணை), அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம். மாணவ, மாணவியர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதற்கு தேசிய மயமாக்கப்பட்டவங்கிகளிலும், மற்ற வங்கிகளிலும் பெற்றுள்ள கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்.
கடன் சுமையை நீக்க...
வேளாண்மை கடன்களால் அல்லலுறும் விவசாயிகளுக்கு அவர்தம் கடன் சுமையை நீக்கும் வகையில் உறுதியான திட்டம் ஒன்றினை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசை அ.தி.மு.க வலியுறுத்தும். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தும். மருத்துவம் போன்ற உயர்கல்வியில் சேர நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தும். தாழ்த்தப்பட்ட, மலைவாழ், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்கப்படும் வகையில் தனியார் துறைகளின் வேலைவாய்ப்புகளிலும், இடஒதுக்கீடு வழங்க புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அ.தி.மு.க. மத்திய அரசை வலியுறுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி. சி.வி.சண்முகம், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், செம்மலை, அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் எம்.பி.க்கள் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்
* அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்கப்படும்
* வறுமையில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1500 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
* பிலிப்பைன்ஸ் நாட்டை முன்மாதிரியாக கொண்டு எம்ஜிஆர் தேசிய திறன் மோம்பாடு திட்டம் அமைக்கப்படும்
* காவிரி-கோதாவரி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
* கடலில் வீணாக நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
* மாணவர்கள் பெற்ற கல்விக் கடனை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்
* நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்
* தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டிற்கு புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும்
* கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
* இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தப்படும்.
* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரைவும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்படும்
* பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்படும்
* தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்
* காவிரி டெல்டாவை பாதிக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
* மதம் மாறினாலும் சாதி ரீதியிலான இடஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க புதிய சட்டம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.