முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்வரிசையில் நிற்கும் வீரனாக மக்கள் பணியாற்றுவதில் என்றும் அ.தி.மு.க. களத்தில் முன் நிற்கும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உறுதி

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மக்கள் பணியாற்றுவதில் என்றும் முன்வரிசையில் நிற்கும் வீரனாக அ.தி.மு.க. முன் நிற்கும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை சென்னையில் நேற்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது, 

முன்வரிசையில்...

சமூக நீதி, பெண் விடுதலை, மதச்சார்பின்மை, எளியோருக்கு சமூகப் பெண் விடுதலை, மதச்சார்பின்மை, எளியோருக்கு சமூகப் பொருளாதார பாதுகாப்பு, எல்லோருக்கும் சம வாய்ப்பு என்ற லட்சியங்களை நோக்கி பயணிக்கும் அ.தி.மு.க. மக்கள் தொண்டாற்றுவதில் என்றென்றும் முன்வரிசையில் நிற்கும் வீரனாக மக்களுக்குப் பணியாற்றும். இந்த இயக்கம் மக்களால் உருவான இயக்கம். மக்களுக்கான இயக்கம் என்ற உறுதிமொழியை மீண்டும் தமிழக, புதுச்சேரி வாக்காளப் பெருமக்களுக்கு அ.தி.மு.க. அளிக்கிறது.

வெற்றி பெறச் செய்ய...

நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், அவரவர் சின்னங்களில் வாக்களித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறச் செய்திடுமாறு வாக்காளப் பெருமக்களை அன்புடன் வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து