முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது: முதல் நாளில் 20 பேர் மனுத்தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் முதல் நாளான நேற்று 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னுரிமை...

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்பட்டது. வேட்புமனுவை பெறுவதற்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள், அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தன. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் (23 மற்றும் 24-ம் தேதிகளில்) விடுமுறை என்பதால் வேட்பு மனுக்கள் பெறப்படாது. வேட்புமனு தாக்கல் செய்ய 26-ம் தேதி கடைசி நாள் ஆகும். 

20 பேர் மனு தாக்கல்...

முதல் நாளான நேற்று தமிழகம் முழுவதும் 20 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வடசென்னையில் 4, தென்சென்னையில் 3, திருப்பூர் மற்றும் ராமநாதபுரத்தில் தலா 2 பேர் உள்பட மொத்தம் 20 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து