முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெக்ஸிட் விவகாரத்தில் மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த முடியாது - இங்கிலாந்து சபாநாயகர் உத்தரவு

புதன்கிழமை, 20 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை பிரெக்ஸிட் என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வருகிற 29-ம் தேதி முடிவடைகிறது. இதற்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம்தான் முட்டுக்கட்டையாக உள்ளது. கடந்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை எம்.பி.க்கள் நிராகரித்து விட்டனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜான் பெர்கோவ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிப்பதை தடுக்கவும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு உரிய மரியாதை அளிக்கவும் இந்த நடவடிக்கை அத்தியாவசியமாகி உள்ளது என்று தெரிவித்துள்ளார். சபாநாயகரின் இந்த அதிரடி உத்தரவு தெரசா மேவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து