முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் அனைத்து அமைப்புகள் மீதும் பா.ஜ.க. தாக்குதல் நடத்தியுள்ளது: பிரியங்கா

புதன்கிழமை, 20 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகள் மீதும் பா.ஜ.க. தாக்குதல் நடத்தி உள்ளது என்று பிரியங்கா விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியையும் வாரிசு அரசியல் பற்றியும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து தனது வலைதள பிளாக்கில் எழுதியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரியங்கா காந்தி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில் பிரியங்கா காந்தி கூறியிருப்பதாவது:- கடந்த 5 ஆண்டுகளில் ஊடகம் உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகள் மீதும் பா.ஜ.க.வும் பிரதமர் மோடியும் தாக்குதல் நடத்தி உள்ளனர். மக்களை முட்டாள்கள் என நினைத்து பேசுவதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும். நடப்பது அனைத்தையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து