முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் உயிரிழப்பு

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் உயிரிழந்தார்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், நேற்று இதே ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள சுந்தர்பானி செக்டார் பகுதியில் உள்ள கெரி என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் இந்திய வீரர் உயிரிழந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து