முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருப்புக்கோட்டை அருகே கல்குவாரியில் வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      விருதுநகர்
Image Unavailable

அருப்புக்கோட்டை, -  அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்றில் கடந்த 26ம் தேதி அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பிருதிவிராஜ் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை மேற்க்கொண்டனர். மேலும் முகம் சிதைந்து அழுகிய நிலையிலும், ரத்தக்கறைகளை தீயிட்டும், தடயங்கள் கிடைக்காமல் இருக்க மிளகாய்பொடிகள் தூவி குற்றவாளிகள் தலைமறைவாகி விட்டனர். இவ்வழக்கு விசாரணை தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கபட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்க்கொண்டு வந்தனர். விசாரணையில் இறந்தவர் அருப்புக்கோட்டை வி.வி.ஆர். காலணியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுந்தரமகாலிங்கம் (வயது 21) என தெரிய வந்தது. மேலும் விசாரணையில் சந்தேகத்தின் பேரில் ராமசாமிபுரத்தை சேர்ந்த முத்துவேல் மகன் பிரபாகரன் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்க்கொண்டனர்.  பிரபாகரன் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன்; அருப்புக்கோட்டையில் வாழ்ந்து வந்ததாகவும், வேலை விஷயமாக மேட்டுப்பாளையம் சென்ற போது அங்கு டிக் டாக் செயலிமூலம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டதாகவும், அவரிடம் தனக்கு திருமணம் ஆகவில்லை எனக்கூறி ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுந்தரமகாலிங்கம் தனது நண்பரான பிரபாகரனை சந்திக்க மேட்டுப்பாளையம் சென்றுள்ளார். அப்போது நண்பர் பிரபாகரன் இல்லாத நேரத்தில் அவரது 2வது மனைவியிடம் பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், அவர் மீது குற்;ற வழக்குகள் இருப்பதாக கூறி அவர்களிடையே பிரிவினையை உண்டாக்கியுள்ளதாக தெரியவருகிறது. பின்னர் சுந்தரமகாலிங்கம் பிரபாகரன் மனைவியுடன் தொடர்பு வைக்க முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் ராமசாமிபுரத்தை சேர்ந்த நண்பர்கள் ரமேஷ் (20), அழகுராஜா (22), மாதவன் (19), அர்ஜூன் (19) ஆகியோர்களுடன் சேர்ந்து தன் மனைவியை பிரித்த சுந்தரமகாலிங்கத்தை  கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.  சம்பவத்தன்று நண்பர்களுடன்  கஞ்சநாயக்கன்பட்டி கல்குவாரி பகுதிக்கு சுந்தரமகாலிங்கத்தை கூட்டி சென்று அங்கு மது அருந்தியுள்ளனர்.  பின்னர் திடிரென்று பிரபாகரன் சுந்தரமகாலிங்கத்தின் கழுத்தை  கத்தியால் அறுத்தும், உடனிருந்த அவனது  நண்பர்கள் அடையாளம் தெரியாமல் இருக்க கல்லால் முகத்தை சிதைத்ததாகவும், தடயங்களை அழித்து, பின்னர் உடலில் கல்லை கட்டி கல்குவாரி வீசிவிட்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. இச் சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகள்  5 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து