எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நடப்பு ஐ.பி.எல். தொடர் யுவ்ராஜ், கெயில், இம்ரான் தாஹிர் உள்ளிட்ட வீரர்களுக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல். திருவிழா
ஐ.பி.எல். போட்டிகள் 23-ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளன. முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியும் மோத உள்ளன. இதனால் ஐ.பி.எல். திருவிழா நாடு முழுவதும் களைகட்ட உள்ளது. இம்முறை அனைத்து அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் சீனியர் வீரர்கள் யார் ? மேலும் இந்த ஐ.பி.எல். தொடருடன் ஓய்வு பெறலாம் என கூறப்படும் முக்கியமான 5 வீரர்களை கொஞ்சம் பார்க்கலாம்.
ஷேன் வாட்சன் - சென்னை சூப்பர் கிங்ஸ்
கடந்தாண்டு ஐ.பி.எல். தொடரில்தான் முதன் முதலாக சிஎஸ்கே அணியில் இணைந்தார் ஷேன் வாட்சன். ஐ.பி.எல். தொடக்கத்தில் இருந்தே ராஜஸ்தான் ராயல்ஸ் உள்பட பல்வேறு அணிகளுக்காக விளையாடி வந்தாலும், கடந்த தொடரில் சிஎஸ்கே அணிக்காக 555 ரன்களை குவித்தார். வாட்சனின் ஸ்டிரைக் ரேட் 154 என அதகளம் செய்தார். சிஎஸ்கே அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய வாட்சன் செய்ததெல்லாம் மேஜிக். இப்போது 37 வயதான ஷேன் வாட்சன், அடுத்த ஐ.பி.எல். தொடரில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. எனவே இந்தாண்டும் தன்னுடைய சரவெடி ஆட்டத்தை வாட்சன் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுவராஜ் சிங் - மும்பை இந்தியன்ஸ்
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த சிங்கம், யுவராஜ் சிங். 2011 இந்திய அணி உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ். 2011 உலகக் கோப்பையின் தொடர் நாயகனும் இவர்தான். இந்திய அணிக்காக பல்வேறு கோப்பைகளை வென்று கொடுத்த யுவராஜ் சிங், 2013 ஆம் ஆண்டுக்கு பின்பு அணிக்குள்ளே வருவதும் செல்வதுமாக இருந்தார். திடீரென ஃபார்முக்கு வருவார் பின்பு காணாமல் போவோர். இந்தாண்டு ஐ.பி.எல். ஏலத்தில் யுவராஜ் சிங்கை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதே யுவராஜ் சிங்கை 2015 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.16 கோடிக்கு ஏலம் எடுத்தது. யுவராஜூக்கும் இப்போது 37 வயது. இந்த ஐ.பி.எல். போட்டியில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் இந்த பஞ்சாப் சிங்கம் நிச்சயம் கர்ஜிக்கும்.
ஏபி டி வில்லியர்ஸ் - ராயல் பெங்களூரு
மைதானத்தில் புகுந்தால் 360 டிகிரிக்கும் பேட்டை சுழற்றும் புயல் டி வில்லியர்ஸ். தென் ஆப்பிரிக்க அணியின் சாதனை வீரர். பல ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் டி வில்லியர்ஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டார். அது என்ன ராசியோ தெரியவில்லை, டி வில்லியர்ஸ் அணியில் இருந்தும் பெங்களூர் அணியால் இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்ல முடியவில்லை. இப்போது டி வில்லியர்ஸ்க்கு 36 வயதாகிறது, ஏற்கெனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றுவிட்டதால். இந்த ஐ.பி.எல். தொடரும் அவருக்கு இறுதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ் கெயில் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
மேற்கு இந்திய தீவுகளின் தனித்துவமிக்க பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில். அதிரடி மன்னன் பல ஆண்டு காலமாக பெங்களூரு அணிக்காக விளையாடியவர். இதுவரை இவர் ஐ.பி.எல். தொடர்களில் மட்டும் 3994 ரன்களை எடுத்துள்ளார். 40 வயதாகிவிட்ட கிறிஸ் கெயில், இந்த உலகக் கோப்பையுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற இருப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார். யுவராஜ் சிங் போலவே கிறிஸ் கெயிலையும் ஐ.பி.எல். ஏலத்தின் முதல் சுற்றில் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. பின்பு, இறுதியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.
இம்ரான் தாஹிர் - சென்னை சூப்பர் கிங்ஸ்
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். 39 வயதாகும் இவர் 2011 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 95 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள தாஹிர், 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்தாண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தாஹிக் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் எழுதியும், பேசியும் கலகலப்பாக்குவார். விக்கெட் எடுத்துவிட்டால் இரு கைகளையும் பறவை போல விரித்து மைதானத்தை சுற்றும் தாஹிருக்கு, சென்னை ரசிகர்கள் "பராசக்தி எக்ஸ்பிரஸ்" என பெயர் வைத்தனர். ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு பின்பு ஓய்வுப் பெறவுள்ளதாக தெரிவித்துள்ள தாஹிருக்கு இதுதான் கடைசி ஐ.பி.எல்.லாக இருக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 19 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
மேற்குவங்க மாநில டி.ஜி.பி. மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி : மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜீவ்குமார் மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
காமி விமர்சனம்
18 Mar 2024நாயகன் விஷ்வக் சென்னின் தேகம் மீது மனிதர்கள் லேசாக தொட்டால் கூட அவருக்கு மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு ஏற்படுவதோடு, உடலில் மாற்றம் ஏற்பட்டு சுயநினைவின்றி சில மணி நேர
-
காடுவெட்டி விமர்சனம்
18 Mar 2024கதையின் நாயகன் ஆர்.கே.சுரேஷ், ”பெண்ணை தொட்டா வந்து நிற்பேண்டா...” என்று சொல்லிக்கொண்டு அடிதடியில் ஈடுபடுகிறார், ஊர் மக்களுக்கு உதவி செய்கிறார், காதல் தொல்லை கொடுக்கும்
-
ரோமியோ இசை வெளியீடு
18 Mar 2024அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரோமியோ’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார்.
-
அ.தி.மு.க. சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
மதுபான கொள்கை வழக்கில் கைது: சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி : மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
வரும் 21-ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவலையும் வெளியிட வேண்டும்: எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான எஸ்.பி.ஐ.
-
அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி உறுதியானது?
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கூட்டணி உறுதியானதாகவும், நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
பிரேமலு விமர்சனம்
18 Mar 2024கல்லூரியில் படிக்கும் நாயகன் சக மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார்.
-
கா இசை வெளியீடு
18 Mar 2024நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா, தற்போது நடித்து வரும் 'கா' படத்தில் வனவிலங்கு புகைப்பட கலைஞராக நடித்து வரும் நிலையில், இம்மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
-
ரெபல் இசை வெளியீடு
18 Mar 2024ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி.
-
ரஸாகர் விமர்சனம்
18 Mar 2024ஐதரபாத், இந்தியாவுடன் இணைய மறுத்ததோடு, துருக்கிஸ்தான் என்ற தனி நாடாக உருவெடுப்பதற்கான முயற்சியில் இறங்கியது.
-
திருப்பூரில் சுப்புராயன், நாகையில் செல்வராஜ்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.