எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நடப்பு ஐ.பி.எல். தொடர் யுவ்ராஜ், கெயில், இம்ரான் தாஹிர் உள்ளிட்ட வீரர்களுக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல். திருவிழா
ஐ.பி.எல். போட்டிகள் 23-ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளன. முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியும் மோத உள்ளன. இதனால் ஐ.பி.எல். திருவிழா நாடு முழுவதும் களைகட்ட உள்ளது. இம்முறை அனைத்து அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் சீனியர் வீரர்கள் யார் ? மேலும் இந்த ஐ.பி.எல். தொடருடன் ஓய்வு பெறலாம் என கூறப்படும் முக்கியமான 5 வீரர்களை கொஞ்சம் பார்க்கலாம்.
ஷேன் வாட்சன் - சென்னை சூப்பர் கிங்ஸ்
கடந்தாண்டு ஐ.பி.எல். தொடரில்தான் முதன் முதலாக சிஎஸ்கே அணியில் இணைந்தார் ஷேன் வாட்சன். ஐ.பி.எல். தொடக்கத்தில் இருந்தே ராஜஸ்தான் ராயல்ஸ் உள்பட பல்வேறு அணிகளுக்காக விளையாடி வந்தாலும், கடந்த தொடரில் சிஎஸ்கே அணிக்காக 555 ரன்களை குவித்தார். வாட்சனின் ஸ்டிரைக் ரேட் 154 என அதகளம் செய்தார். சிஎஸ்கே அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய வாட்சன் செய்ததெல்லாம் மேஜிக். இப்போது 37 வயதான ஷேன் வாட்சன், அடுத்த ஐ.பி.எல். தொடரில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. எனவே இந்தாண்டும் தன்னுடைய சரவெடி ஆட்டத்தை வாட்சன் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுவராஜ் சிங் - மும்பை இந்தியன்ஸ்
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த சிங்கம், யுவராஜ் சிங். 2011 இந்திய அணி உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ். 2011 உலகக் கோப்பையின் தொடர் நாயகனும் இவர்தான். இந்திய அணிக்காக பல்வேறு கோப்பைகளை வென்று கொடுத்த யுவராஜ் சிங், 2013 ஆம் ஆண்டுக்கு பின்பு அணிக்குள்ளே வருவதும் செல்வதுமாக இருந்தார். திடீரென ஃபார்முக்கு வருவார் பின்பு காணாமல் போவோர். இந்தாண்டு ஐ.பி.எல். ஏலத்தில் யுவராஜ் சிங்கை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதே யுவராஜ் சிங்கை 2015 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.16 கோடிக்கு ஏலம் எடுத்தது. யுவராஜூக்கும் இப்போது 37 வயது. இந்த ஐ.பி.எல். போட்டியில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் இந்த பஞ்சாப் சிங்கம் நிச்சயம் கர்ஜிக்கும்.
ஏபி டி வில்லியர்ஸ் - ராயல் பெங்களூரு
மைதானத்தில் புகுந்தால் 360 டிகிரிக்கும் பேட்டை சுழற்றும் புயல் டி வில்லியர்ஸ். தென் ஆப்பிரிக்க அணியின் சாதனை வீரர். பல ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் டி வில்லியர்ஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டார். அது என்ன ராசியோ தெரியவில்லை, டி வில்லியர்ஸ் அணியில் இருந்தும் பெங்களூர் அணியால் இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்ல முடியவில்லை. இப்போது டி வில்லியர்ஸ்க்கு 36 வயதாகிறது, ஏற்கெனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றுவிட்டதால். இந்த ஐ.பி.எல். தொடரும் அவருக்கு இறுதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ் கெயில் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
மேற்கு இந்திய தீவுகளின் தனித்துவமிக்க பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில். அதிரடி மன்னன் பல ஆண்டு காலமாக பெங்களூரு அணிக்காக விளையாடியவர். இதுவரை இவர் ஐ.பி.எல். தொடர்களில் மட்டும் 3994 ரன்களை எடுத்துள்ளார். 40 வயதாகிவிட்ட கிறிஸ் கெயில், இந்த உலகக் கோப்பையுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற இருப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார். யுவராஜ் சிங் போலவே கிறிஸ் கெயிலையும் ஐ.பி.எல். ஏலத்தின் முதல் சுற்றில் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. பின்பு, இறுதியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.
இம்ரான் தாஹிர் - சென்னை சூப்பர் கிங்ஸ்
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். 39 வயதாகும் இவர் 2011 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 95 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள தாஹிர், 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்தாண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தாஹிக் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் எழுதியும், பேசியும் கலகலப்பாக்குவார். விக்கெட் எடுத்துவிட்டால் இரு கைகளையும் பறவை போல விரித்து மைதானத்தை சுற்றும் தாஹிருக்கு, சென்னை ரசிகர்கள் "பராசக்தி எக்ஸ்பிரஸ்" என பெயர் வைத்தனர். ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு பின்பு ஓய்வுப் பெறவுள்ளதாக தெரிவித்துள்ள தாஹிருக்கு இதுதான் கடைசி ஐ.பி.எல்.லாக இருக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.