முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் இன்று ராகுல் பிரசாரம்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

பாட்னா, பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று பீகாரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரசுக்கு 9 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இன்று அவர் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். பீகாரில் வங்காளதேச எல்லையையொட்டி சீமாஞ்சல் என்ற பகுதி உள்ளது. அங்கு 4 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் ஏப்ரல் 18-ம் தேதியும், 23-ம் தேதியும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்குள்ள புளுனியாவில் ராகுல்காந்தி இன்று பிரசாரம் செய்கிறார். இந்த பகுதியில் சிறுபான்மை மக்கள் 70 சதவீதம் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் கூட்டணியில் ஆதரவாளர்கள். அவர்கள் ஓட்டுகளை குறி வைத்து ராகுல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து