எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் : பிரியாணி உணவகம், செல்போன் கடை உட்பட எல்லாக் கடைகளிலும் அராஜகம் செய்யும் தி.மு.க.வினர், ஆட்சிக்கு வந்தால் மக்கள் ரோட்டில் நடமாட முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரக் கூட்டத்தில் ஆவேசமாக பேசினார். மேலும் தி.மு.கவின் தேர்தல் அறிக்கை ஒரு பொய்யான அறிக்கை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மின்னல் வேக பிரச்சாரம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தனது மின்னல் வேக பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் தி.மு.க.வை கடுமையாக தாக்கி பேசினார். ஏழை மக்களுக்கு உதவக் கூடிய திட்டங்களை வழக்குப் போட்டு கெடுக்கும் தி.மு.க. என்று முதல்வர் குற்றம் சாட்டினார். நேற்று தனது பிரச்சார பயணத்தை தொடர்ந்த அவர் கொளுத்தும் வெயிலில் வேலூர் மாவட்டத்துக்குட்பட்ட திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடியில் அவர் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முதல்வரின் பேச்சை பொதுமக்கள் திரண்டு வந்து கேட்டனர்.
2-வது நாள் பிரசாரம்...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேலூர் மாவட்டம் சேலம் இணைப்பு சாலையில் இருந்து தனது 2-வது நாள் பிரச்சாரத்தை தொடங்கினார். திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து சேலம் இணைப்பு சாலை சந்திப்பு, திருப்பத்தூர், ஆசிரியர் நகர், ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளிலும், வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடியிலும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வாக்குறுதிகளை...
அப்போது அவர் பேசியதாவது, அம்மாவின் பொற்கால ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. எதை செய்ய முடியுமோ அதை மட்டும்தான் தேர்தல் அறிக்கையில் அம்மா வெளியிட்டார். குறிப்பாக, 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என்று அறிவித்து அதன்படி அவர் வழங்கினார். மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கி கல்வி புரட்சியை ஏற்படுத்தினார். தான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார்.
பல்வேறு நிறுவனங்கள்...
இந்த தேர்தலில் அமைந்துள்ள கூட்டணி. மெகா கூட்டணி. வெற்றி கூட்டணி. மக்கள் நலன் சார்ந்த கூட்டணி. வெளி மாநிலங்களில் இருந்து தொழில் தொடங்குவதற்கு பல்வேறு தொழில் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அந்த நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்த அரசு வழங்கும் என்ற நம்பிக்கையில் அந்த நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. தி.மு.க. ஆட்சியிலே இது போன்ற தொழிற்சாலைகள் தொடங்கியது உண்டா? என்றால் நிச்சயமாக இல்லை.
தி.மு.க ஆட்சியில் அராஜகம்
தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் அராஜகம் இருந்தது. அந்த அராஜகங்களை இரும்புக்கரம் கொண்டு அம்மாவின் அரசு ஒடுக்கியது. ஆனால் இன்று எதிர்க்கட்சியாக இருக்கின்ற போதே பிரியாணி கடைக்கு சென்று உணவருந்தி விட்டு அதற்கு பணம் கொடுக்காமல் உரிமையாளர்களிடம் தகராறு செய்வது, அழகு நிலையங்களுக்கு சென்று அங்குள்ள பெண்களை அடித்து உதைப்பது, செல்போன் கடைக்கு சென்று அராஜகத்தில் ஈடுபடுவது, இது போன்ற எண்ணற்ற மக்கள் விரோத செயல்களில் தி.மு.க. வினர் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ஆளும் கட்சியாக வந்தால் யாரும் சுதந்திரமாக ரோட்டில் நடமாடக் கூட முடியாது என்பதுதான் உண்மை. அதே போல எங்கே விலைமதிப்புள்ள நிலங்கள் இருக்கிறதோ, அதை அபகரிக்கும் முயற்சியிலும் தி.மு.க.வினர் ஈடுபடுவார்கள். இதையெல்லாம் சிந்தித்து நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
கொள்கை இல்லாதது...
தி.மு.கவும் ஒரு கூட்டணி அமைத்துள்ளது. அது கொள்கையில்லாத கூட்டணி. ஸ்டாலின் ஒவ்வொரு மாநிலத்திற்கு செல்லும் போதும் ஒவ்வொருவரை பிரதம வேட்பாளர் என கூறி வருகிறார். தி.மு.க கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் வெற்றி பெற்ற போது விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் யாருக்கும் கொடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெற பெய்யான அறிக்கையை கொடுத்து மக்களை தி.மு.க ஏமாற்றி வருகிறது. நாளுக்கு ஒரு அறிக்கை கொடுத்து கொல்லைப்புறம் வழியாக வாக்குகளை பெற தி.மு.க முயற்சிக்கிறது.
சட்டம் - ஒழுங்கு....
திருவண்ணாமலை அ.தி.மு.க. நாடாளுமன்ற வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சராக இருந்தவர். இவர் வெற்றி பெற்றால் அத்தொகுதியில் மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தி.மு.கவை சேர்ந்தவர்கள் வென்றால் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அமைச்சராவார்கள். குடும்பத்தை மட்டுமே வளர்ச்சியடைய செய்வார்கள். அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் மக்கள் நலனை கருத்தில் கொண்ட கூட்டணி. அதே போல் முதல்வராக ஜெயலலிதா (அம்மா) பொறுப்பெற்ற பிறகு கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் கிடையாது. இதை அறவே ஒழித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது.
10 லட்சம் பேருக்கு...
ஒரு ஆட்சி சிறப்பாக நடைபெற சட்டம் ஒழுங்கு முக்கியம். மேலும் அண்மையில் நடந்த தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 3 லட்சத்தி 431 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் இதுவரை 2,500 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள ஓடை, ஆறுகளில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மை திட்டத்தை நடைமுறை படுத்த 4 ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்களை நியாமித்துள்ளோம். இதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவர். அதே போல் மறைந்த சாதிக்பாஷா மனைவியின் கார் அண்மையில் தாக்கப்பட்டது. இவற்றையெல்லாம் அ.தி.மு.க அரசு கவனித்து வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.