எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கொடநாடு விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் பேசிய விவகாரத்தில் அவர் மீது வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தமிழக தலைமை அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்தார்.
ஆய்வு மேற்கொள்ளும்...
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
கொடநாடு விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பாக அ.தி.மு.க. தரப்பில் இருந்து புகார் செய்யப்பட்டுள்ளது. அதற்கான வீடியோ ஆதாரமும் அளிக்கப்பட்டுள்ளது. அதை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விசாரணைக்காக அனுப்பி இருக்கிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற புகார்களை கவனிப்பதற்காக வீடியோ குழு ஒன்று உள்ளது. சென்னையில் எனது தலைமையில் ஒரு வீடியோ குழுவும் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஒரு வீடியோ குழுவும் இயங்கி வருகிறது. அது வீடியோவில் உள்ள பேச்சுக்கள், கருத்துக்கள் அனைத்தும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதுபற்றி ஆய்வு மேற்கொள்ளும்.
நடவடிக்கைகள்...
பின்னர் அதன் அடிப்படையில் பரிந்துரை அறிக்கையை வீடியோ குழு அளிக்கும். அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுவாக அவசரமாக நிகழ்வுகளாக இருக்கும் பட்சத்தில் உடனயாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியின் தலைமையில் ஒரு வீடியோ குழு உள்ளது. அதில் ஏதாவது மேல்நடவடிக்கை தேவைப்பட்டால் அந்தக் குழுவும் ஆய்வுகளை மேற்கொள்ளும். அதில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் மேல்முறையீட்டுக்காக தலைமைத் தேர்தல் அதிகாரியின் தலைமையிலான வீடியோ குழுவிடம் முறையிட முடியும்.
விரைவில் வருவர்...
தேர்தல் பாதுகாப்புக்காக 200 கம்பெனி துணை ராணுவம் (கம்பெனி ஒன்றுக்கு 90 வீரர்கள் வீதம்) கோரப்பட்டுள்ளது. அதில் 10 கம்பெனி துணை ராணுவ படையினர் ஏற்கனவே வந்துவிட்டனர். அவர்கள், கண்காணிப்புக் குழு, பறக்கும்படை ஆகியோருடன் சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள துணை ராணுவக் கம்பெனி, வாக்குப்பதிவுக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு தமிழகத்துக்கு வந்துவிடும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்துக்கு 140 கம்பெனி துணை ராணுவம் வந்திருந்தது.
புகார் வந்தால்...
தேர்தல் செலவீன பார்வையாளர்கள் கேட்டுக் கொண்டால், அந்தப் பகுதிகளில் கூடுதல் எண்ணிக்கையில் கண்காணிப்புக் குழு, பறக்கும்படையை நியமித்து வருகிறோம். வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும்போது பிரமாண வாக்குமூலம் தவறான தகவல்களைக் கொண்டதாக இருக்கக் கூடாது. எல்லா பிரமாண வாக்குமூலங்களையும் ஒரே நேரத்தில் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது. ஆனால் அதில் தவறுகள் இருந்தால் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கும். அவை கோர்ட்டில் வழக்காக தாக்கல் செய்யப்படும். அதோடு, பிரமாண வாக்குமூலங்களில் தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக வேறு யாரிடமாவது இருந்து புகார் வந்தால் அதை தேர்தல் ஆணையம் உடனே கவனிக்கும்.
அனுப்பி வைப்போம்...
சூலூர் எம்.எல்.ஏ. மரணம் பற்றிய அறிவிப்பை தமிழக சட்டசபை எங்களுக்கு அளித்துவிட்டது. அதை இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றுவிட்டோம். திருப்பரங்குன்றம் தொகுதி பற்றி கோர்ட்டில் தீர்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. அந்த உத்தரவின் நகல் வந்ததும் அதை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்போம். ஒட்டப்பிடாரம் தொகுதிக்கான ஐகோர்ட்டின் உத்தரவை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளோம். அரவக்குறிச்சி தொகுதியின் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இடைத்தேர்தலை நடத்த...
இந்தத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றால் அதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அதற்கு நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோமா என்பதை மட்டும் முன்னதாக தேர்தல் ஆணையம் எங்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளும். தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் இடைத் தேர்தலை நடத்த தயார். தேர்தல் நடத்தை விதிமீறல் நடவடிக்கையாக கடந்த 14 நாட்களில் ரூ.29.84 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. அதில் உரிய ஆவணங்களைக் காட்டியதைத் தொடர்ந்து ரூ.4.45 கோடி உரியவர்களிடம் திருப்பித் தரப்பட்டுவிட்டது.
நெறிமுறைகளில்...
அதுபோல இதுவரை பல்வேறு இடங்களில் மொத்தம் 209.53 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. உரிய ஆவணங்களைக் காட்டியதால் அதில் 94 கிலோ தங்கம் திருப்பித் தரப்பட்டுவிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால், அதைக் கைப்பற்ற வேண்டும் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி நெறிமுறைகளில் ஒன்று. எனவே அந்தத் தொகையில் மாற்றங்கள் கொண்டு வர இப்போது எந்த எண்ணமும் எங்களிடம் இல்லை. இதுபற்றி வணிகர் சங்கங்கள் அளித்துள்ள மனுக்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம்.
கைதிகளுக்கு ஓட்டுரிமை...
தமிழகத்தில் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களுக்கான 63ஆயிரத்து 77 சர்வீஸ் ஓட்டுகள் உள்ளன. தேர்தல் பணியாற்றுவோருக்கான தபால் ஓட்டுக்கள் 3.50 லட்சம் உள்ளன. விசாரணையில் உள்ள சிறைக் கைதிகளுக்கு ஓட்டுரிமை உண்டு. அவர்களும் தபால் ஓட்டுக்கள் மூலம் வாக்களிக்கலாம். வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பே, அதாவது 16-ம் தேதியன்றே வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதை நிறுத்திவிட்டோம். ஆனாலும் பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்களை புதிய வாக்காளர்கள் தொடர்ந்து அளிக்கலாம். ஆனால் தேர்தல் நடந்து முடிந்த பின்னர்தான் பெயர் சேர்க்கும் நடவடிக்கைகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.