முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகர் அ.தி.மு.க. அவைத்தலைவர் துரைபாண்டியன் மறைவுக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இரங்கல்

சனிக்கிழமை, 23 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் புதூர் துரைபாண்டியன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடிபழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆற்றொணா துயரம்

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.,

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவுரும், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவருமான புதூர் கே.துரைபாண்டியன் உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணா துயரம் அடைந்தோம். ஆரம்பகால அ.தி.மு.க. பிரமுகர் துரைப்பாண்டியன், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மீதும் கட்சியின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு கட்சிப் பணிகளை திறம்பட ஆற்றிவந்துள்ளார்.

ஆழ்ந்த இரங்கல்...

துரைபாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். இவ்வாறு அவர்கள் தெரி்வித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து