முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா அரசு ஒரு நபர் ஷோ: ராகுல்

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : யாரிடமும் ஆலோசனை கேட்காமல் தனி ஆவர்த்தனம் செய்கிறார் மம்தா பானர்ஜி என காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் கலந்து கொண்டு பேசியதாவது:-

இம்மாநிலத்தை ஆளும் முதல்வர் மம்தா, யாரிடமும் ஆலோசனையோ, கருத்துகளையோ பரிமாறிக் கொள்வதில்லை. மம்தா அரசு ஒரு நபர் ஷோ. மக்கள் நலனில் அக்கறையில்லாமல் , தன் மனதில் என்ன நினைக்கிறாரே அதனை அப்படியே செய்கிறார். விவசாயிகள் நலனுக்காகவும், சிறு வணிகர்கள் நலனுக்காகவும் எந்த திட்டங்களையும் மம்தா கொண்டு வரவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து