முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி: நவோமி, ஏஞ்சலிக் அதிர்ச்சி தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

புளோரிடா : மியாமி ஓபன் டென்னிஸில் முன்னணி வீராங்கனைகளான நவோமி ஒசாகா, ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் தோல்வியடைந்தனர். 

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் தர வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, தைவானின் சுவெய்-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை ஒசாகா 6-4 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 27-ம் நிலை வீராங்கனையான சுவெய் 2-வது சுற்றில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 2-வது செட் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சுவெய் 7(7)-6(4) என 2-வது செட்டை கைப்பற்றினார். 3-வது செட்டில் ஒசாகா கடுமையாக போராடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3-6 என எளிதில் தோல்வியடைந்தார். இதனால் சுவெய் ஒசாகாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 8-ம் நிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் தரநிலை பெறாத கனடாவின் அண்ட்ரீஸ்குவை எதிர்கொண்டார். முதல் செட்டை அண்ட்ரீஸ்கு 6-4 எனக் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கெர்பர் 2-வது செட்டை 6-4 எனக்கைப்பற்றினார். ஆனால், 3-வது செட்டில் 1-6 என சரணடைந்ததால், ஏஞ்சலிக் கெர்பர் தோல்வியடைந்து வெளியேறினார்.

பெர்ட்டன்ஸ், கோன்டாவெயிட், வோஸ்னியாக்கி ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து