எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் : கடவுள் இல்லை என்று வெளித்தோற்றத்தில் கூறிக் கொள்ளும் ஸ்டாலின், தங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வது அவருக்கு தெரியாதா? ஏன் இந்த இரட்டை வேடம் போடுகிறார் என்று வேலூரில் நடந்த பிரச்சாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, சோளிங்கர் சட்டசபை தொகுதி வேட்பாளர் சம்பத் ஆகியோரை ஆதரித்து, சத்துவாச்சாரி, ஆற்காடு பேருந்து நிலையம், முத்துக்கடை, சோளிங்கர், பானாவரம் கூட்டுரோடு ஆகிய இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது மூன்றாவது நாள் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்கள் நலன் சார்ந்த கூட்டணி. இந்த கூட்டணி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். நான் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து வாக்குக் கேட்டு வருகிறேன். செல்லுமிடம் எல்லாம் பொதுமக்கள் அமோக ஆதரவு அளித்து எங்களை வரவேற்கிறார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஆதாரிக்க வேண்டிய திட்டங்களை ஆதரிக்கும், எதிர்க்க வேண்டிய திட்டங்களை எதிர்த்து குரல் கொடுக்கும். அ.தி.மு.க.வின் கொள்கையை ஒருபோது விட்டுக் கொடுக்காது. தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை உண்மைக்கு மாறான அறிக்கை. அவர்கள் அறிவித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது. எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஊழல் என்று சொல்லி வருகிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி தி.மு.க. என்பதை அவர் மறந்து விட்டு பேசுகிறார். அவர் தேடித் தேடி பார்க்கிறார். எங்கேயும் எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை. அ.தி.மு.க.வை உடைக்கவும், ஆட்சியை கலைக்கவும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார். எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. தி.மு.க. எவ்வளவோ போராட்டங்களை நடத்தினாலும் அனைத்து போராட்டங்களிலும் வெற்றி காணும் வகையில் போராடுபவர்களை அழைத்து அவர்களிடத்தில் சமாதானமாக பேசி, போராட்ங்களை முடிவுக்கு கொண்டு வந்த அரசு அம்மாவின் அரசு. தி.மு.க. தூண்டுதலின் பேரில் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும், அத்தனை போராட்டங்களையும் முறியடிக்கின்ற சக்தியும் ஆற்றலும் இந்த அரசுக்கு உண்டு.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை கண்டுபிடித்தது இந்த அரசு தான். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்கிறார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுத்து அவர்களை வெளியில் கொண்டு வருபவர்கள் தி.மு.க.வைச் சார்ந்தவர்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சந்தேகங்களை தீர்த்து வைப்பது அரசினுடைய கடமை. எனவே, யார் தவறு செய்திருந்தாலும், தப்பிக்க முடியாது. உரிய நடவடிக்கை அரசு எடுக்கும். சாதிக் பாட்சா மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தினர் சார்பில் கூடா நட்பு கேடாய் முடியும் என்று கூறி நாளிதழ்களில் நினைவஞ்சலி விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், சாதிக் பாட்சா மனைவி காரிலே சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்தும் உரிய விசாரனை மேற்கொள்ளப்படும்.
தி.மு.க. கூட்டணியில் தற்போது சேர்ந்துள்ள வைகோ, என் உயிர் உள்ளவரை, ஸ்டாலினை முதலமைச்சராக வர விடமாட்டேன் என்றும், தி.மு.க. குடும்ப ஆதிக்க கட்சி என்றும் கூறினார். ஆனால் இன்று அவரை, தங்கள் கூட்டணியில் சேர்த்தது எப்படி, இதையெல்லாம் நாட்டு மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். கடவுள் இல்லை என்று வெளித்தோற்றத்தில் கூறிக் கொள்ளும் ஸ்டாலின், தங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வது அவருக்கு தெரியாதா? ஏன் இந்த இரட்டை வேடம் போடுகிறார். எறும்பு தேய்ந்து கட்டெறும்பான கதையாக கட்சி துவங்கி மக்களின் ஆதாரவைப் பெறாமல், சிறிது சிறிதாக மக்கள் செல்வாக்கை இழந்துள்ள கட்சிகளோடு ஸ்டாலின் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறார். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
அ.தி.மு.க ஆட்சியில் ஜாதி கலவரம் இல்லை, மதக் கலவரம் இல்லை, மிகவும் அமைதியான முறையில் மக்கள் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் இந்த அரசு அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து, அவர்களின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது. இதற்கான விருதும் இந்திய துணை ஜனாதிபதியால் வழங்கப்பட்டு, அதை நான் பெற்றுக் கொண்டேன். சட்டம் ஒழுங்கு மிகச்சிறப்பாக செயல்படுவதற்கு இந்தியாவில் இருக்கின்ற காவல் நிலையங்களில் கோவை, ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முதலிடத்தையும், அண்ணா நகர் காவல் நிலையம் ஐந்தாவது இடத்தையும், பெரியகுளம் காவல் நிலையம் எட்டாவது இடத்தையும் பெற்றிருப்பதே சாட்சி ஆகும்.
ஸ்டாலின், தனது தேர்தல் பிரச்சாரத்திலே என்னை கடவுள் என்று கூறியிருக்கிறார். நான் ஒரு சாதாரண விவசாயி. அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல ஸ்டாலினுக்கு வேண்டுமானால் அப்படி தெரியும். நான் என்றுமே என்னை ஒரு முதல்வராக நினைத்தது இல்லை. நான் தொண்டனாக இருக்கிறேன். ஆனால் ஸ்டாலின் தலைவனாக இருந்து பார்க்கிறார். மக்கள் கொடுக்கின்ற அன்பு தான், எனக்கு பரிசு. நான் 1974-ம் ஆண்டு கிளைக் கழகச் செயலாளாராக என்னுடைய அரசியல் வாழ்க்கையை துவக்கி இன்று படிப்படியாக பல்வேறு பொறுப்புகளைப் பெற்று உயர்ந்து முதல்வராக இருக்கின்றேன். ஆனால், ஸ்டாலின் அப்படி அல்ல, அவரது தந்தை தி.மு.க. தலைவராக இருந்தார். அவர் மறைவுக்குப் பின்பு அவரே தலைவராகி விட்டார். அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பொறுப்புக்கு வர முடியும் என்பதற்கு நானே உதாரணமாக இருக்கிறேன். இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மாவின் அரசு என்றும் அரணாகவும், பாதுகாப்பாகவும் இருந்து வருகிறது. இப்தார் நோன்பு கஞ்சிக்காக 4900 மெட்ரிக் டன் அரிசி வழங்கிய அரசு அம்மா அரசு. அதே போன்று நாகூர் தர்கா சந்தன கூடு விழாவிற்கு சந்தனம் வழங்கிய அரசும் அம்மாவின் அரசு, ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய பெருமக்களுக்கு மத்திய அரசு மானியத்தை நிறுத்திய போதும், இஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக ரூ.6 கோடி மாநில அரசின் நிதியுதவி வழங்கிய அரசு அம்மாவின் அரசாகும்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தனது நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு 100 பேர் என 600 ஏழை, எளிய மாணவர்களுக்கு தனது கல்வி நிறுவனத்தின் மூலம் இலவசமாக கல்வி வழங்குவதாகவும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில் ஒரு திருமண மண்டபம் கட்டித் தரப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். இது போன்ற மக்கள் நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்திற்கு இரட்டை இலை சின்னத்திலும், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராகப் போட்டியிடும் ஏ.கே.மூர்த்திக்கு மாம்பழம் சின்னத்திலும், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் சம்பத்திற்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.