முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் தாக்குதல் பயங்கரவாதிகள் பயன்படுத்திய அமெரிக்க சிம்கார்டு

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அமெரிக்கா விர்ச்சுவல் சிம்கார்டை பயன்படுத்தி உள்ளதாக மத்திய புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். 
 
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 44 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மனித குண்டாக செயல்பட்டு இந்த தாக்குதலை நடத்தியது அகில்தார் என்ற பயங்கரவாதி என்பது தெரியவந்தது . தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட முதாசிர் கான் என்பவன் தரல் என்ற இடத்தில் பதுங்கி இருந்த போது பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். அதில்தார், முதாசிர்கான் இருவருமே ஸ்மார்ட் போன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்க தலைவர்களுடன் தொடர்பில் இருந்தனர்.

அந்த போனுக்கு அவர்கள் அமெரிக்கா விர்ச்சுவல் சிம்கார்டை பயன்படுத்தி உள்ளனர். இதை புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். அந்த போனில் இணைய தளம், பேஸ்புக், வாட்ஸ்- அப் சேவைகளையும் பெற்று இருக்கிறார்கள்.

இந்த போன்களுக்கான சிம்கார்டை அமெரிக்காவில் இருந்து யாரோ வாங்கி பயங்கரவாதிக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க மத்திய புலனாய்வுத்துறை அமைப்பினர் அமெரிக்க உதவியை நாட உள்ளனர்.  மும்பையில் அதேபோல 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோதும் அவர்கள் வெளிநாட்டு சிம்கார்டை பயன்படுத்தி உள்ளனர். 

அவற்றை இத்தாலி நாட்டில் இருந்து பெற்று இருந்தனர். இந்த சிம்கார்டுகளை இத்தாலியில் உள்ள ஒரு நிறுவனம் மூலமாக ஜாவீத் இக்பால் என்பவர் வாங்கி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இத்தாலி போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.இதேபோல இப்போதும் பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களையும் கண்டுபிடிக்க புலனாய்வுத் துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து