முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லரின் அறிக்கை மீது கருத்து மோதல் கிடையாது: டிரம்ப்

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ராபர்ட் முல்லரின் அறிக்கைக்கு எந்தத் தடையும் இல்லை. எந்த கருத்து மோதலும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட  டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் ஜேம்ஸ் கோமி தலைமையில் விசாரணை நடைபெற்றது. பின்னர் சிறப்பு விசாரணை அதிகாரியாக எப்.பி.ஐ. அமைப்பின் முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் மாற்றப்பட்டார்.

இது குறித்து கடந்த 22 மாதங்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது அதன் அறிக்கை அண்மையில் அமெரிக்க அரசு நீதித்துறையிடமும், அட்டார்னி ஜெனரல் வில்லியம் பாரிடமும்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷ்யா எந்த வகையிலும் உதவவில்லை என்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை இவ்வாறு அமைப்பதற்கு அதிபர் டிரம்பின் அழுத்தம் ராபர்ட் முல்லரின் விசாரணைக் குழுவின் மீது இருந்ததா என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அவர் புளோரிடாவில் இருந்து தனிவிமானம் மூலம் வாஷிங்டன் திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ராபர்ட் முல்லரின் அறிக்கைக்கு எந்தத் தடையும் இல்லை, எந்த கருத்து மோதலும் இல்லை என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து