முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் வரையப்பட்ட ரங்கோலி கோலம்: தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டார்

புதன்கிழமை, 27 மார்ச் 2019      மதுரை
Image Unavailable

தேனி,- பென்னிகுயிக் பேருந்து நிலையத்தில், 33.தேனி பாராளுமன்ற பொதுத்தேர்தல் - 2019 மற்றும் 198.ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி மற்றும் 199.பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு நூறு சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்திடும் பொருட்டு பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுவினரால் வரையப்பட்ட ரங்கோலி கோலத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,   பார்வையிட்டார்.

பார்வையிட்ட பின் மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 33.தேனி பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2019 மற்றும்  198. ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி,; 199. பெரியகுளம்(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலை முன்னிட்டு நூறு சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்திடும் பொருட்டு பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் 8 ஊராட்சி ஒன்றியங்கள், 22 பேரூராட்சிப்பகுதிகளில் வாக்காளர் பிராச்சார வாகனம், மகளிர் சுய உதவிக்குழுவினரின் ரங்கோலி, ராட்சச பலூன் பறக்க விடுதல், மெஹந்தி திருவிழா, மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைத்தல், அஞ்சல் வில்லை வெளியிடுதல், வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரின் கடிதம் அனுப்புதல், வாகனங்களில் விழிப்புணர்வு பேரணி, எரிவாயு சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுதல், கல்லூரி மாணவர்களின் குடயளா ஆழடிஇ வணிக நிறுவன பைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் வெளியிடுதல், பெட்ரோல் விற்பனை நிலைய பணியாளர்களுக்கு விழிப்புணர்வு டீ சர்ட் வழங்குதல், மாணவ, மாணவியர்களின் உருவங்கள் அடங்கிய விழிப்புணர்வு மாணவ, மாணவியர்களின் மனித சங்கிலி கையெழுத்து இயக்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் மூலம் பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தேர்தல் முத்திரை, தேர்தல் நாள், வாக்களிப்பதன் அவசியம் குறித்த கருத்துக்கள், இந்திய வரை படம் போன்றவற்றை வரைந்து பொதுமக்கள் எளிதில் பார்வையிட்டு, புரிந்து கொள்ளுவதற்கு ஏதுவாக ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் நடத்தப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

 இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பா.திலகவதி, மகளிர் சுய உதவிக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து