எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை -மதுரையில் நேற்று காலை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு காவல் துறை இயக்குனர் சட்டம் மற்றும் ஒழுங்கு, விஜய்குமார் தலைமையில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல், மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பாதுகாப்பு பணி மற்றும் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணி குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு காவல்துறை இயக்குனர் விஜய் குமார் சக போலீஸ் அதிகாரி களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார். நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படாமல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்வது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். மேலும் அவர் கூறுகையில் மதுரை மாநகரில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கை வெளியிட்ட பின்பு இது நாள் வரையில் 53 வழக்குகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக பதிவு செய்யப்பட்டு உள்ளன. பறக்கும் படையினரால் ரூபாய்.5,13,66,690/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் அடிக்கடி ரோந்து சென்றும் பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டவும், தேர்தலின் போது அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க அறிவுறுத்தினார். பாதுகாப்பு பணியினை திறம்பட செயல்படுத்தவும் தகவல் பரிமாற்றத்தை துரிதமாக மேற்கொள்ளவும் தொலைத்தொடர்பு திட்டம் (COMMUNICATION PLAN) தீட்டப்பட்டு அதற்கான உபகரணங்கள் ஆயத்தநிலையில் உள்ளன என்றும், இவை தவிர சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்க கூடிய பகுதிகள் எவை என கண்டறியப்பட்டு அங்கு தேவையான அளவில் நிலைகுழுக்களும் (PICKETS) அதிவிரைவுப்படையினர் (QUICK REACTION TEAM) மற்றும் டெல்டா வாகனங்களும் சேர்ந்து ரோந்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் , மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் கண்காணிக்கப்பட்டு வருகின்றது எனவும் சிறப்பு காவல்துறை இயக்குனர் விஜய் குமார் தெரிவித்தார். மேலும் சித்திரை திருவிழா நிகழ்ச்சிக்கு வருகைதரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 3000 காவல்துறையினர் நியமிக்க்கபட உள்ளதாகவும்,பொதுமக்களின் உடைமைகளை பாதுகாக்கவும் மற்றும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக 400 CCTV கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் மேலும் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வருகை தரும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கென தனி இடம் ஒதுக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் சிரமமின்றி சாலையில் பயணம் செய்யவும் மற்றும் சாலையை கடக்கவும் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் தடுப்பாண்கள் அமைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், குழந்தைகளை தவறவிடும் பெற்றோர்கள் உடனுக்குடன் காவல்துறையை தொடர்புகொண்டு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து குழந்தைகளை விரைவில் மீட்கும் வசதிகளும் செய்யப்பட உள்ளதாகவும், குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு குற்றப்பிரிவு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்போவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தென் மண்டல காவல் துறை தலைவர் சண்முக ராஜேஸ்வரன், காவல் துறை தலைவர் பொருளாதார குற்றப்பிரிவு மனோகரன் , காவல் துறை துணை தலைவர் எழிலரசன், நிர்வாகம் மதுரை சரக துணை தலைவர் பிரதீப் குமார் , ராம்நாடு சரக காவல் துணை தலைவர் காமினி , திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் ஜோசிநிர்மல் குமார் , மதுரை மாநகர காவல் துணை ஆணையர்கள் சசிமோகன் சட்டம் & ஒழுங்கு, செந்தில்குமார், TPS. குற்றம், மகேஷ் , தலைமையிடம் அருண் பால கோபாலன் போக்குவரத்து , முருகேசன் TPS., ஆயுதப்படை, மற்றும் தேர்தல் பிரிவு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், ராம்நாடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் பழனிகுமார், த.சி.கா.ஆறாம் அணி கமாண்டென்ட் சுகுமார், காவலர் பயிற்சி கல்லூரி காவல் கண்காணிப்பாளர் மணி, சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் நாகஜோதி, ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.