எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா-மலேசியா பெண்கள் ஹாக்கி அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் நடந்தது.
விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கி உள்ளது. இந்திய அணியில் வந்தனா கட்டாரியா 2 கோலும் (17-வது, 60-வது நிமிடம்), லால்ரெம்சியாமி ஒரு கோலும் அடித்தனர்.
____________
மலேசியா ஓபன்: ஸ்ரீகாந்த் தோல்வி
மலேசியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதியில் ஒலிம்பியன் சாம்பியனான சீனாவின் சென் லாங்கை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 18-21, 19-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார். ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் 16-11 என முன்னணியில் இருந்தார். அதன்பின் சீன வீரர் சென் லாங் 2 புள்ளிகள் மட்டுமே விட்டுக்கொடுத்து 10 புள்ளிகள் பெற்று 21-18 எனக் கைப்பற்றினார்.
2-வது செட்டில் ஸ்ரீகாந்த் 7-11 என பின்தங்கியிருந்தார். அதன்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19-19 என சமநிலைப் பெற்றார். ஆனால் வெற்றிக்கான இரண்டு புள்ளிகளை சென் லாங் பெற்று 21-19 எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
_____________
ஆப்கான் டி20 அணிக்கு ரஷித் கேப்டன்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 அணிகளுக்கு கேப்டனாக அஸ்கார் ஆப்கான் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை நீக்கிவிட்டு மூன்று அணிக்கும் மூன்று கேப்டன்களை ஆப்கான் கிரிக்கெட் வாரியம் நேற்று நியமித்துள்ளது.
அதன்படி குல்பாடின் நைப், ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாகவும் துணை கேப்டனாக ரஷித் கானும் டெஸ்ட் அணி கேப்டனாக ரமத் ஷாவும் துணை கேப்டனாக ஹஸ்மத் ஷாகிதியும் சுழல்பந்துவீச்சாளர் ரஷித் கான் டி20 கேப்டனாகவும் துணைக்கேப்டனாக ஷபிக்குல்லா ஷபக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
____________
ஆண்டர்சனுக்கு அஸ்வின் பதிலடி
ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் மார்ச் மாதம் 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 25-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற போடியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் பஞ்சாப் அணியின் அஸ்வின் அவுட்டாக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அஸ்வின் ஃபோட்டோவை கிழித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கு அஸ்வின், ‘ நான் செய்தது தவறு என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்று நினைக்கலாம். ஆனால் நாளை அவரே கூட மான்கட் முறையில் விக்கெட்டை எடுக்க நேரிடும். கிரிக்கெட்டில் மான்கட் முறை இருக்கிறது. அதனால் அது பற்றி பேச வேண்டிய அவசியமில்லை’ என்று பதிலளித்துள்ளார். மேலும் என்னைப் பற்றி தெரிந்தவர்களுக்கு நான் சட்டவிரோதமாக எதையும் செய்யமாட்டேன் என்று தெரியும். இந்த சர்ச்சைக்குப் பிறகும் என்னுடைய அணியினர் எனக்கு துணை நிற்கின்றனர். பல வீரர்கள என்னிடம் வந்து நான் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று சொல்கின்றனர். மான்கட் முறையில் நான் விக்கெட்டை எடுத்தது குறித்த சர்ச்சை பேச்சுகள் என்னை பாதிக்கவில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார்.
____________
அணி தேர்வு குறித்து ரோஹித் விளக்கம்
கிரிக்கெட்.காம் என்ற இணையதள அறிமுக நிகழ்ச்சியில் நடந்த குழு விவாதத்தில் கெவின் பீட்டர்சன், பிரையன் லாரா, ரோஹித் சர்மா, மகேலா ஜெயவர்தனே, மகளிர் கிரிக்கெட்டின் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ரோஹித் சர்மா பேசும்போது, “உலகக்கோப்பை அணித்தேர்வுக்கு ஐபிஎல் போட்டிகள் அளவு கோலாக இருக்கக் கூடாது. கடந்த 4 ஆண்டுகளில் நிறைய சர்வதேச போட்டிகள் ஆடியுள்ளோம் அதுதான் நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதற்கான ஆதாரம். 50 ஒவர் கிரிக்கெட்டுக்கான அணியை 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வைத்துத் தேர்வு செய்ய முடியாது. உலகக்கோப்பைக்கு நம் அணி ஏறக்குறைய செட்டில் ஆகிவிட்டது. ஒரு சில இடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். கேப்டன், கோச், தேர்வாளர்கள் இதனை முடிவு செய்வார்கள்” என்றார் ரோஹித் சர்மா.
____________
நியூசி., முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு மிரட்டல்
இதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் ஆா்.சி.பி. தோல்வியடைந்துள்ளது ஆர்சிபி அணி. இதனால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஆர்சிபி ரசிகர் ஒருவர் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக சைமன் டோல் ட்விட்டரில் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக அவர் ஸ்கீரின்ஷாட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், ஆர்சிபி அணியை மேலும் விமரிசித்தால் நீங்கள் கொல்லப்படுவது உறுதி என்று ஒரு ரசிகர் சைமன் டோலுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
நான் என்ன சொன்னேன் என்பது நினைவில்லை. ஆனால் அதற்காகக் கொலை மிரட்டலா? இது ஒரு கிரிக்கெட் ஆட்டம் மட்டும்தான், இயல்பாக இருங்கள் என்று ரசிகருக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார் டோல். சைமன் டோல் நியூஸிலாந்து அணிக்காக 32 டெஸ்டுகளிலும் 42 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.
____________
மிதாலிக்கு பந்துவீசிய கிளார்க்
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னணி அணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு நாள் அணியின் கேப்டனாக ‘லேடி சச்சின்’ என கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மிதாலி ராஜ் இருக்கிறார். மிதாலி ராஜ், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது, மகளிர் கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் உலகக்கோப்பையை எதிர்நோக்கி உள்ளது. இங்கிலாந்தில் வரும் 30-ம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது.
இதற்காக இந்திய அணி வீராங்கனைகள் தீவிர பயிற்சி செய்து வருகின்றனர். அதேபோல், மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜூம் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, உள்ளரங்க மைதானத்தில் பயிற்சி செய்த மிதாலிக்கு, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பந்துவீசியுள்ளார். இந்த வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு பதிலளித்த கிளார்க், “மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார், என்ன ஒரு வீராங்கனை, என்ன ஒரு மனிதர்” என மிதாலியை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
_____________
துப்பாக்கி முனையில் கால்பந்து வீரர் கடத்தல்
இத்தாலியில் கால்பந்து வீரர் ஒருவரின் கடைசி போட்டி மறக்க முடியாத தருணமாக அமைந்துவிட்டது. உள்ளூர் கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரபலமான வீரர் இக்னேஸியோ பார்பகால்லோ (55). இவர் தனது கடைசி போட்டியை சொந்த மைதானத்தில் விளையாடத் தொடங்கினார்.சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று புழுதியைக் கிளம்பிக்கொண்டு நடு மைதானத்தில் தரையிறங்கியது. அதில் இருந்து வெளியே வந்த மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் இக்னேஸியோவை கடத்திச் சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
பின்னர்தான் தெரிந்தது இது சும்மா ஜாலிக்காக எடுக்கப்பட்ட பிராங் வீடியோ. இதனை அறிந்த போட்டி நிர்வாகம், அவரது அணியை இடைநீக்கம் செய்ததோடு, அபராதமும் விதித்தது. உண்மையிலேயே அந்த போட்டி மறக்க முடியாத தருணமாக மாறிவிட்டது.
____________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.