முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வத்தலக்குண்டு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் தேன்மொழிசேகர் 50 கிராமங்களில் தீவிர பிரச்சாரம்

திங்கட்கிழமை, 8 ஏப்ரல் 2019      திண்டுக்கல்
Image Unavailable

நிலக்கோட்டை  - வத்தலக்குண்டு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் தேன்மொழிசேகர்  50 கிராமங்களில் தீவிர பிரச்சாரம் செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிடும் தேன்மொழிசேகர் தமிழக முதல்வர் பழனிச்சாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கழக அமைப்பு செயலாளர் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் மாவட்ட கழக செயலளார் மருதராஜ், எம்.பி.உதயகுமார் ஆகியோர் ஆசியுடன் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து தீவிர பிரச்சாரம் செய்கிறார். வத்தலக்குண்டு ஒன்றியப்பகுதியில் அண்ணாநகர், நாகலாபுரம், கண்ணாபட்டி, நடகோட்டை, சாலைப்புதூர், செங்கட்டாம்பட்டி உள்பட 50 கிராமங்களில் வாக்கு சேகரித்தார். நிலக்கோட்டை வேட்பாளர் தேன்மொழிசேகருக்கும், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதிமுத்து ஆகியோர் வாக்கு சேகரித்தார்கள். சென்ற இடமெல்லாம் பூரண கும்ப மரியாதை மற்றும் ஆராத்தி எடுத்து வேட்பாளர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று தங்களுக்கு வாக்களிப்போம் என்று கூறினார்கள்.
வத்தலக்குண்டு ஒன்றிய கழக செயலளார் பாண்டியன், முன்னாள் யூனியன் பெருந்தலைவர் மோகன், தொகுதி கழக செயலாளர் கனகதுரை, வத்தலக்குண்டு பேரூர் செயலாளர் பீர்முகமது, கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ரத்தினம், முன்னாள் யூனியன்கவுன்சிலர் தட்டிமுருகன், அரசு வழக்கறிஞர் ராணி, குன்னுவாரன்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளைச்சாமி, இளைஞரணி ரமேஷ், ஒன்றிய சிறுபான்மை செயலாளர் ஜான் மற்றும் கூட்டணி கட்சி அனைத்து நிர்வாகிகள் உடன் சென்று கலந்து தீவிர வாக்கு சேகரித்தார்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து