முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 15 லட்சம் போடுவோம் என்று வாக்குறுதி அளிக்கவில்லை: ராஜ்நாத் சிங்

செவ்வாய்க்கிழமை, 9 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று பா.ஜ.க வாக்குறுதி அளிக்கவில்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். மோடியே மீண்டும் பிரதமர் ஆவார். பெரும்பான்மை இல்லையெனில் நானோ, நிதின் கட்காரியோ பிரதமர் ஆவோம் என கூறுவது கற்பனையே. 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை. கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றுதான் கூறினோம். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து