முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம். -மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை விளக்கிடும் வகையிலான கையெழுத்து இயக்கம் திருமங்கலம் உதவித் தேர்தல் அலுவலர் மகாலிங்கம் தலைமையிலும் வட்டாட்சியர் தனலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தாங்கள் வாக்களிப்பதை குறித்து கையெழுத்திட்டு வெளிப்படுத்தினர்.
வரும் 18ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அப்போது ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் கையெழுத்து போட்டு தங்கள் ஓட்டு போடுவதை உறுதியளித்தனர்.மேலும் தாங்கள் வாக்களிப்பது யாருக்கு என்று தெரியும் வகையில் விவி பாட் வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.இந்தநிகழ்ச்சியில் வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து