முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      தேனி
Image Unavailable

  தேனி,-  பாராளுமன்ற பொதுத்தேர்தல் - 2019 மற்றும் 198.ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி மற்றும் 199.பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்திடும் பொருட்டு பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தேனி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில், தொழில் பயிற்சி நிலையத்தில் பயிலுகின்ற மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற வாக்காளிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்,   கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் - 2019 மற்றும் 198.ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி மற்றும் 199.பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்திடும் பொருட்டு பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், பிராச்சார வாகனம், மகளிர் சுய உதவிக்குழுவினரின் ரங்கோலி, ராட்சச பலூன் மூலம் விழிப்புணர்வு, மெஹந்தி திருவிழா, மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைத்தல், வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரின் கடிதம் அனுப்புதல், வாகனங்களில் விழிப்புணர்வு பேரணி, எரிவாயு சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுதல், கல்லூரி மாணவர்களின் குடயளா ஆழடிஇ வணிக நிறுவன பைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிட்டு வெளியிடுதல், அஞ்சல் வில்லை வெளியிடுதல், பெட்ரோல் விற்பனை நிலைய பணியாளர்களுக்கு விழிப்புணர்வு உடைகள், தொப்பி வழங்குதல், மாணவ, மாணவியர்களின் உருவங்கள் அடங்கிய விழிப்புணர்வு மாணவ, மாணவியர்களின் மனித சங்கிலி கையெழுத்து இயக்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதனைத்தொடர்ந்து,  தேனி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிலுகின்ற 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு, தேர்தல் நாள் : 18.04.2019,  வாக்காளர் என்பதில் பெருமை கொள்வேன்! வாக்காளிக்க தயார் என்பேன்!, வாக்குரிமை நமது அடிப்;படை உரிமை, வாக்களிப்பது ஜனநாயக கடமை, வாக்களித்திடுவீர், ஜனநாயகத்தை காத்திடுவீர், வாக்கின் வலிமை தேசத்தின் வலிமை, 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியனின் முதல் பெருமை வாக்களித்தல், வேற்றுமை மறந்து ஒற்றுமையாக வாக்களிக்கும் நேரமிது, ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது, எனது வாக்கு எனது உரிமை, 100 சதவீத ஓட்டு இந்தியர்களின் பெருமை போன்ற பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கமிட்டவாறும் தேனி தொழிற் பயிற்சி நிலைத்திலிருந்து கருவேல்நாயக்கன்பட்டி வரை சென்றடைந்தனர்.

இந்நிகழ்வின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) சி.தினேஷ்குமார், ., தேனி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் முனைவர் வா.வேல்முருகன், பயிற்றுநர்கள் வே.சேகரன், த.செல்வராஜ், எஸ்.சரிதா மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து