முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

தைபே : தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அலறியடித்துக் கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறினர். 30 நொடிகள் வரை நிலநடுக்கம் நீடித்ததாக அங்குள்ள மக்கள் கூறினர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.01 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தற்போது வரை தகவல் எதுவும் வெளிவரவில்லை. கடந்த 1999-ம் ஆண்டு தைவானில், 7.6 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 2,297 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து