முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குடும்பத்துடன் ஓட்டு போட்டனர்

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019      மதுரை
Image Unavailable

மதுரை, - மதுரையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் குடும்பத்துடன் சென்று ஓட்டுப்போட்டனர்.
இந்தியாவில் 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. நேற்று 2-வது கட்டமாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மதுரையில் நேற்று பாராளுமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. இந்த தேர்தலை முன்னிட்டு மதுரை பாராளுமன்ற தேர்தல் அலுவலரும், மதுரை மாவட்ட கலெக்டருமான நடராஜன், ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை முதல் வாக்காக பதிவு செய்தார்.
 மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ, தனது குடும்பத்தாருடன் சென்று ஓட்டுப் போட்டார். மதுரை அண்ணாநகர் அம்பிகா கலை கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தனது குடும்பத்தாருடன் சென்று நேற்று ஓட்டுப் போட்டார்.
இதே போல் பசுமலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தனது குடும்பத்தாருடன் சென்று ஓட்டுப் போட்டார். மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சரவணன், கான்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று குடும்பத்துடன் ஓட்டுப் போட்டார். மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணியின் துணை செயலாளர் ஜி.என். அன்புசெழியன், கீரைத்துறையில் உள்ள அருப்புக்கோட்டை நாடார் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்று தனது குடும்பத்துடன் வாக்கினை பதிவு செய்தார். அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் கிரம்மர் சுரேஷ், மேல பொன்னகரம் மீனாட்சி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்று நேற்று ஓட்டுப் போட்டார். மேலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் என்ற செல்வம் அழகர்கோவில் அருகே உள்ள வலையபட்டியில் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்று தமது வாக்கை பதிவு செய்தார்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ். பாண்டியன், டி.ஆர்.ஓ. காலனி பகுதி வாக்குச்சாவடியில்  குடும்பத்துடன் சென்று தனது வாக்கை பதிவு செய்தார். பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடி தலைவரும், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. பொருளாளருமான வில்லாபுரம் ஜெ. ராஜா, வி்ல்லாபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு குடும்பத்துடன் சென்று ஓட்டுப் போட்டார்.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து