முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல் நிலையத்தில் புகுந்து கைதியை தாக்கிய திரிபுரா காங்கிரஸ் தலைவர்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

அகார்தலா, காவல் நிலையத்தில் புகுந்து கைதியை திரிபுரா காங்கிரஸ் தலைவர் ஒருவர் தாக்கி உள்ளார்.

திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவரான பிராத்யாட் தேவ் பர்மன், காவல் நிலையத்துக்குள் புகுந்து, கைதி ஒருவரை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
பிராத்யாட் தேவின் சகோதரியான ப்ரக்யா தேவ் பர்மன், கிழக்கு திரிபுரா மக்களவை தொகுதியில் போட்டியிடும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, ப்ரக்யாவின் கார் மீது ஒருவர் கல் வீசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவரை பார்க்க வந்திருந்த பிராத்யாட், காவல் நிலையம் என்றும் பாராமல் அந்த நபரது கன்னத்தில் பளார் என அறைந்தார். இந்நிலையில், காவலர்களை அருகில் வைத்துக் கொண்டே, பிராத்யாட் அத்துமீறி நடந்ததாக கூறி பா.ஜ.க. உள்ளிட்ட கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து