முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன்னை பார்க்க முடியாததால் அழுத சிறுவனுடன் தொலைபேசியில் பேசி சர்ப்ரைஸ் கொடுத்த ராகுல் காந்தி

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், தன்னை பார்க்க முடியாமல் அழுத சிறுவனுடன் தொலைபேசி வாயிலாக பேசி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெரும் ஆச்சரியத்தை  கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் வயநாடு மற்றும் அமேதி என இரு பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த 17-ம் தேதி கேரளாவின் கண்ணூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார் ராகுல். அப்பகுதியில் வசிக்கும் நந்தன் என்ற ஏழு வயது சிறுவன் ராகுலை பார்க்க விரும்பியுள்ளான். தனது பெற்றோருடன் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த சிறுவனால் கடைசியில் ராகுலை பார்க்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த அந்த சிறுவன் அழுது கொண்டிருந்துள்ளான். அந்த சிறுவனின் புகைப்படத்தை அவனின் தந்தை பேஸ்புக்கில் பதிவிட அது வைரலாகியது. இது கேரள காங்கிரசார் மூலம் ராகுலுக்கு தெரியவர உடனடியாக அவர், சிறுவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் மகிழ்ந்த அந்த சிறுவன், ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து