முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் காலியாகவுள்ள அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடம் நாளை விருப்பமனுக்கள் பெறப்படும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

19-ம் தேதி தேர்தல்...

தமிழக சட்டசபையில் 22 இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. இதில் 18 தொகுதிகளுக்கு கடந்த 18-ம் தேதி பாராளுமன்ற, தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் மே மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 4 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டனர். அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இ.பி.எஸ். - ஓ.பி.எஸ்...

இதற்கிடையே, தமிழகத்தில் காலியாகவுள்ள ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடம் நாளை விருப்பமனுக்கள் பெறப்படும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

ரூ.25 ஆயிரம் செலுத்தி...

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளதை யொட்டி அ.தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கட்சியினர், அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அன்றைய தினமே வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

22-ம் தேதி அறிவிக்கை

இதற்கிடையே நேற்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் நிருபர்களை சந்தித்து தெரிவிக்கையில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான தேர்தல் குறித்து வரும் 22-ம் தேதி அறிவிக்கை வெளியிடப்படும். அந்த அறிவிக்கை வெளிவந்ததும் அந்த தொகுதியில் வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடலாம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து