முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கையில் நேற்று முன்தினம் 8 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து , கொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்றை கைப்பற்றிய போலீசார் அதனை செயலிழக்கச் செய்தனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று முன்தினம் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள், குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 215 பேர் உயிரிழந்தனர். 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவற்றில் சில சம்பவங்கள் தற்கொலப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து