முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை பலி எண்ணிக்கையை தவறுதலாக குறிப்பிட்ட டிரம்ப் - சமூல வலைதளங்களில் கிண்டல்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கையை அதிபர் டிரம்ப் உயர்த்தியதால் டுவிட்டரில் அவரை கிண்டல் செய்தனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது டுவிட்டர் பக்கத்தில் இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்தார். அதில், இலங்கையில், தேவாலயங்களிலும், ஓட்டல்களிலும் நடந்த குண்டு வெடிப்புகளில் 138 மில்லியன் பேர் பலியானதற்கு அமெரிக்க மக்கள் சார்பில் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.  இவ்வாறு பலி எண்ணிக்கையை தவறுதலாக குறிப்பிட்டதால் வழக்கம்போல் பலரும் அவரை கிண்டல் செய்தனர். இலங்கையின் மக்கள் தொகையை விட நீங்கள் சொன்னது அதிகம். அப்படியானால் அந்த நாடே ஆளில்லாத நாடாகி விட்டதா? என்று ஒருவர் கேட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து