முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுதம் பற்றிய பிரதமர் மோடியின் பேச்சு பொறுப்பற்றது - பாக். வெளியுறவு அமைச்சகம் அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பார்மரில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது பிரதமர் மோடி பேசுகையில்,

இந்தியாவை ஒருநேரத்தில் பாகிஸ்தான் அச்சுறுத்தி வந்த காலம் இருந்தது. எங்களிடம் அணு ஆயுதம் இருக்கிறது. அணு ஆயுத பட்டனை அழுத்தி தாக்கி விடுவோம் என்று கூறியது. இதையே பல்வேறு அதிகாரிகளும் அரசிடம் கூறி வந்தார்கள். நான் கேட்கிறேன், நம்மிடம் இப்போது என்ன இருக்கிறது. நம்மிடம் இருக்கும் அணு ஆயுதங்களை தீபாவளிக்கு வெடிக்கவா வைத்திருக்கிறோம். இந்திய விமானப்படை வீரர் கேப்டன் அபிநந்தன், பாகிஸ்தானில் பிடிபட்ட போது அவரை மீட்க பிரதமர் மோடி 12 ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளதாக, அமெரிக்க மூத்த அதிகாரி பாகிஸ்தானிடம் தெரிவித்தார் என்று பேசினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு சற்றும் எதிர்பாராதது. அரசியல் லாபத்துக்காக இப்படியெல்லாம் பொய் பேசுவது துரதிஷ்டவசமானது, பொறுப்பற்றது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து