முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடிகுண்டை விட சக்தி வாய்ந்தது - ஜனநாயகத்தின் வலிமை: பிரதமர்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : ஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை என்றும், வெடிகுண்டைவிட அது மிகவும் சக்திவாய்ந்தது என்றும் வாக்களித்தபின் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி நேற்று தனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

என் தாய் வீடான குஜராத்தில் எனது கடமையை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்ததன் மூலம் நான் அதிர்ஷ்டசாலி ஆனேன். கும்ப மேளாவில் புனித நீராடினால் தூய்மை அடைவதைப் போல, ஜனநாயக திருவிழாவில் வாக்கை பதிவு செய்த பின் வாக்காளர் தூய்மையானவராக உணரலாம். தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். பயங்கரவாதத்தின் ஆயுதம் வெடிகுண்டு, ஜனநாயகத்திற்கு வலிமை சேர்ப்பது வாக்காளர் அடையாள அட்டை. வெடிகுண்டை விட மிகவும் சக்தி வாய்ந்தது வாக்காளர் அடையாள அட்டை. எனவே நாம் நமது வாக்காளர் அடையாள அட்டையின் வலிமையை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து